Friday, March 8, 2013

தமிழர்களும் செவ்விந்தியர்களும் !

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans & Incas)
நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்.
இன்று உலகமே ‘மாயன்’ (Mayan) என்கிற சொல்லை அறிந்திருக்கிறது. மாயன் நாட்காட்டியை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. உலகம் அழிந்து விடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சித் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. மாயன்கள் யார் என்று தெரியாதவர்கள் கூட மாயன் என்கிற பெயரை ஒலிக்கிறார்கள்.
ஓம்லெக்கு (Omlec), ஆசுதேக்கு (Aztec), மாயன் (Mayan), இன்கா (Inca) ஆகியவை வட அமெரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரிகங்களின் பெயர்கள். வெள்ளையர்கள் இவர்களைச் ‘செவ்விந்தியர்கள்’ என்று பொதுப்பட அழைத்தார்கள். அவர்கள் அப்படி அழைத்ததற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு.
கி.பி 14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வரக் கடல் வழியைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில், அட்லாண்டிக்குப் பெருங்கடலைக் குறுக்காகக் கடந்து இந்தியாவிற்கு வந்து விடலாம் என்று கொலம்பசு நம்பினார்.
அதன்படியே அட்லாண்டிக்கைக் கடக்கவும் செய்தார். ஆனால் அவர் போய்ச் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் கொலம்பசு தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படித் தங்கள் உடம்பில் சிவப்பு நிறம் பூசிக்கொள்வது வழக்கம்.
இதைப் பார்த்த ஐரோப்பியர்கள், உடம்பில் சிவப்பு நிறம் பூசிய அந்த மக்களையும், தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களைச் செவ்விந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
இந்தச் செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்கக் கண்டங்களிலும் (கிரீன்லாந்து, ஐசுலாந்து, கனடா உட்பட) குடியேறினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத புதிர் முடிச்சாக இருக்கிறது.
ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதுதான் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது! இது, படிப்பதற்கு ஏதோ இட்டுக் கட்டிய கதை, தமிழர்களுக்கு வலிந்து பெருமை தேடுகிற முயற்சி, உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புப்படுத்துகிற மோசடி என்பது போலத் தோன்றலாம்; ஆனால் உண்மை இதுதான்!
நல்லவேளை! இந்த உண்மையைக் கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். இதுவே, தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருந்தால் அவரைப் பித்துக்குளி என முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்குக் கண்கூடான எடுத்துக்காட்டு தமிழனே!
‘மெக்சிகோ, பெரு தேடல்’ (The Conquest of Mexico and Peru) என்கிற வரலாற்று நூலை எழுதிய வில்லியம் பெரசுக்கோடு (William H. Prescott) என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் – தமிழர் தொடர்பைப் பற்றிப் பேசியவர். ஐரோப்பியர்கள் எப்படிச் செவ்விந்தியர்களை மெக்சிகோ, பெரு ஆகிய இரு நாடுகளிலிருந்தும் முற்றிலும் ஒழித்துக் கட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விளக்குகிறது.
இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்விகம் குறித்துப் பேசும் வில்லியம், தமிழர் தொடர்பை அடித்துக் கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்கப் பயணக் குறிப்புகளில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.
‘இன்காக்கள் (Incas) தென் அமெரிக்கச் சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பிப் பார்க்கக் கூடச் சிந்திக்கும் நூல் அடுக்கு ஒன்றில், தூசி தும்பட்டைகளுக்கு இடையிலிருந்து எடுத்து இந்த நூலை நான் படித்திருக்கிறேன்.
இந்த நூலை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதன் காரணமாக என்னால் அது குறித்த தகவலைத் தர இயலவில்லை. இது மிகுந்த வருத்தமளிக்கக் கூடிய ஒன்று! இந்தக் கட்டுரை எழுதும் பொருட்டு இந்த அருமையான நூலை நூலகத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை! இந்த நூலுக்கு மறுபதிப்பு இல்லை என்பது அடுத்த வேதனை! தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படித்தான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.
செவ்விந்தியர்களின் பண்பாட்டுக் கூறுகள் மிகத் தெளிவாகத் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியல், செவ்விந்தியர்களின் வானியலோடு ஒத்துப் போகிறது.
செவ்விந்தியர்களின் வானியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் பட்டறிவின் (அனுபவத்தின்) மூலமாகவே இத்தகைய நுட்பங்களைப் பெற முடியும் எனவும், செவ்விந்தியர்களுக்கு இஃது ஒரே இரவில் கைவந்திருக்க இயலாது எனவும் கணிக்கிறார்கள். காரணம், செவ்விந்தியர்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் இல்லை.
அவர்களுடையது நாடோடிப் பண்பாடு, நாடோடி இனம் வானியலில் தேர்ச்சி பெறுவது இயலாது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மெசபதோமியா, எகிப்து நாகரிகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் இல்லை.
செவ்விந்தியர்கள், ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான வேளாண்முறை சார்ந்த நிலவுடைமைப் பண்பாடு கொண்டதாக இல்லை.
காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான வேளாண் சமூகத்தை ஏற்படுத்தாதது வியப்புக்குரியது! மெல் கிப்சனின் (Mel Gibson) அபோகலிப்டா (Apocalypto) படம் தென் அமெரிக்கச் செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருந்தது.
ஆலிவுட்டின் (Hollywood) இனவெறி பிடித்த கௌ பாய்ப் (Cowboy) படங்களில், வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகளில் வட அமெரிக்கச் செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
ஐரோப்பியர்களுக்கு, அமெரிக்கா என ஒரு கண்டம் இருப்பதே கி.பி 12, 13ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கக் கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது! இது கற்பனைக் கதை இல்லை;
இதற்கு வலுவான சான்று உண்டு! தென் பசிபிக் பெருங்கடலில் (Pacific Ocean), ஆத்திரேலியக் (Australia) கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி (Ocean Archeology) மேற்கொண்டபொழுது மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.
முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்தக் கப்பல் வணிகப் பொருட்களுடன் மூழ்கியிருந்தது. கரிம ஆய்வு (Carbon-Dating) முறையின்படி இந்தக் கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கும் மேல் எனத் தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்குப் பயன்படுத்திய கப்பல்களில் ஒன்றுதான் இஃது என்றும், ஆத்திரேலியக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் பெருங்கடலில் முழுகியிருக்கிறது என்றும் முடிவிற்கு வந்தார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த முடிவுக்கு வந்துவிடவில்லை. முதலில் இந்தக் கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது.
தேக்கு, தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அது மட்டுமில்லாமல், 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வணிகம் செய்த நாகரிகங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரிகம் மற்றது எகிப்திய நாகரிகம்! மூழ்கிய அந்தக் கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்குக் கப்பல்களோடு பொருந்திப் போகவில்லை. மேலும், எகிப்தியர்கள் கரையோரமாகவே பயணித்துச் செல்லக் கூடியவர்கள்.
அவர்களுக்கு நடுக்கடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக, அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாகப் பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும். கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக, நிறைய சரக்குகளைக் கையாளக் கூடியதாக இருந்ததோடு, நடுக்கடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவையாக இருந்தன. தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் கலங்களுக்குப் பயன்பாட்டின் அடிப்படையில் அமைந்த பெயர்களைப் பற்றிக் கூறுகிறது. இவை மூலம், தமிழர்களின் கடலோடும் அறிவை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், இது தமிழர்களுடைய வணிகக் கப்பல்தான் என உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆக, வெள்ளையர்கள் நாடோடிகளாகச் சுற்றித் திரிந்த காலத்திலேயே தமிழன் ஆத்திரேலியக் கண்டத்தையும், அமெரிக்கக் கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்திருக்கிறான்! இந்தக் கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கின்றன. நம்முடைய சாபக்கேடு இவற்றைப் பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாமை. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுக்கடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றிப் பதிந்து வைக்கத் தவறியது கேடுகாலமே!
உலக நாகரிகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றிப் பேச இன்று ஆளில்லை! அங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தமிழர்கள் தவறிவிடுகிறார்கள்.
என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை! ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்த அக்கறையின்மைதான் நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைப் பாதிப்புகளிலும் தமிழனைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது!
நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்.

Friday, February 1, 2013

தமிழ் எண்கள், பின்னங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன?

தமிழ் எண்கள், பின்னங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன என்பதுகுறித்து ஒரு சுவாரஸ்யமான கட்டுரையைப் படித்தேன் .

எண் சாண் உடம்பு, பாதத்திலிருந்து 2 சாண், அதாவது நான்கில் ஒரு பாகம், கால் (உறுப்பு), ஆகவே 1/4 = கால்

இன்னும் இரண்டு சாண், 2 + 2 = 4, அதாவது, எட்டில் சரிபாதி, இடுப்பு, அதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ’அரை’, ஆகவே 1/2 = அரை

இன்னும் இரண்டு சாண், 4 + 2 = 6 = 3 * 2, ஒரு கால் (உறுப்பு) 2 சாண் என்பதால், 3/4 = முக்கால்


இந்த விளக்கம் முனைவர் கா. மீனாட்சி சுந்தரம் தந்தது via @nchokkan

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை

"தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை" (post taken from a twit longer by a tweeter )

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்

கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.


மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.





கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)


கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

கி.பி. 1 - 20

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.